பதஞ்சலி நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டை விட இது 5 மடங்குகள் அதிகம். தற்போது ஆடை அணிகலன்கள் துறையில் நுழைந்து அதிலும் 5,000 கோடி ரூபாய்க் கூடுதலாகப் பெறுவதற்கு இலக்கை வைத்துள்ளது..
அது மட்டும் இல்லாமல் 2017-2018 நிதி ஆண்டில் 20,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாய்ப் பெறுவதற்கு இலக்கை வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 2010-ம் ஆண்டு முதல் பதஞ்சலி நிறுவனம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகின்றது என்று இங்குப் பார்ப்போம்.
2010-2011
பதஞ்சலி நிறுவனம் 2010-2011 நிதி ஆண்டில் 317 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
2011-2012
இதுவே 2011-2012 நிதி ஆண்டில் கூடுதலாக லாபம் அடைந்து 453 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளது.
2012-2013
2012-2013 நிதி ஆண்டில் அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்து பதஞ்சலி நிறுவனம் 841 கோடி வருவாயினைப் பெற்றது.
2013-2014
2013-2014 நிதி ஆண்டில் முதன் முறையாக 1,000 கோடி ரூபாயினைக் கடந்து 1,184 கோடி ரூபாய் லாபத்தினைப் பெற்றுள்ளது.
2014-2015
பதஞ்சலி நிறுவனம் 2014-2015ம் ஆண்டு நிதி ஆண்டில் 1,000 கோடியில் இருந்து தாண்டி 2,006 கோடி ரூபாய் லாபத்தினைப் பெற்றுள்ளது.
2015-2016
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாபா ராம்தேவ் அவர்களின் வளர்ச்சி அசுர வேஃபத்தில் வளர்ந்து வருகின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது. 2016-2016 நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயினைப் பெற்று பதஞ்சலி நிறுவனம் 5,000 கோடி ரூபாய் வருவாயினைப் பதிவு செய்துள்ளது.
2016-2017
பதஞ்சலி நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டை விட இது 5 மடங்குகள் அதிகம்.
2017-2018
2017-2018-ம் நிதி ஆண்டில் தனது நிறுவனத்தின் வருவாய் இலக்கினை 20,000 கோடி ரூபாய் முதல் 25,000 கோடி ரூபாயாகப் பதஞ்சலி வைத்துள்ளது. இதற்காகப் பல புதிய துறைகளில் தங்களது ஆதிகத்தினைச் செலுத்தவும் முடிவு செய்து பல அறிவிப்புகளைப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ளது.