இந்திய ரயில்களில் பயணம் செய்யும் போது பதுவு செய்த மற்றும் பதிவு செய்யாத டிக்கெட் இரண்டையும் கடை நேரச் சிக்கல், அல்லது ரயிலை தவறவிட்ட பிற காரணங்களுக்காக ரத்துச் செய்யலாம். அப்படி ரத்து செய்யும் டிக்கெட்களை வைத்து இந்தியன் ரயில்வேஸ் 2016-2017 நிதி ஆண்டில் 1,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக நவம்பர் 2015-ம் தேதி முதல் டிக்கெட் ரத்துச் செய்வதற்கான கட்டணத்தினை இரட்டிப்பு ஆக்கியது என்று கூறப்படுகின்றது. எனவே இதன் இன்னும் பிற காரணங்களை இங்குப் பார்ப்போம்.
25 சதவீத உயர்வு
2015-2016 நிதி ஆண்டில் டிக்கெட் ரத்து செய்தல் மூலம் பெற்ற வருவாயினை வைத்துப் பார்க்கும் 2016-2017 நிதி ஆண்டில் 25 சதவீத வருவாயினைக் கூடுதலாக இந்தியன் ரயில்வேஸ் பெற்றுள்ளதாக மாநிலங்களவை கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் ராஜே கோஹெயின் கூறினார்.
நிபந்தனைகள் பொருந்தும்
ரயில்வே பயணிகள் (டிக்கெட் ரத்து மற்றும் கட்டணத்தைத் திரும்பப்பெறுதல்) விதிமுறைகளின் படி டிக்கட்களை ரத்துச் செய்வதற்கான கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. கட்டணம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிகள் உட்பட்டு வழங்கப்படும். "இருப்பினும், விதிகள் கீழ் மீட்க முடியாத தள்ளுபடி கட்டணங்களைத் திரும்ப வழங்குவதற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை" என்று கோஹெயின் கூறினார்.
தென் மத்திய ரயில்வே
தென் மத்திய ரயில்வே பிரிவில் இருந்து மட்டும் 2016-2017 நிதி ஆண்டில் 103.27 கோடி வரை ரத்து மற்றும் கட்டணங்களாக வருவாய் கிடைத்துள்ளது.
ஏசி டிக்கெட் ரத்துக் கட்டணங்கள்
நவம்பர் 2015-க்கு பிறகு ஏசி-3 டையர் டிக்கெட் ரத்துக் கட்டணம் ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பு செய்யும் போது 90 ரூபாயாக இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே ஏசி-2 டையர் ரத்துக் கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்
ஸ்லீப்பர் வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்யும் போது 60 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே இரண்டாம் வகுப்பு டிக்கெட்டிற்கு 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் ரயில் புறப்படும் நேரம் குறையும் போது மேலும் அதிகரிக்கும்.
புதிய விதி
புதிய விதி அமலுக்கு வந்த பிறகு ரயில் புறப்பட்ட பிறகு டிக்கெட் ரத்து செய்யும் போது எந்தக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படமாட்டாது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications