உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் துறையை சேர்ந்த கியூர்.பிட் நிறுவனம் பாலிவுட் நடிகரான ஹிரித்திக் ரோஷனை தனது பிராண்ட் அம்பாசிட்டராக நியமித்துள்ளது.
100 கோடி ரூபாய் ஒப்பந்தம்
இதற்காக கொடுக்கப்பட்ட தொகை தான் மிகப்பெரியது. இந்தியாவில் எந்தொரு நிறுவனமும் கொடுக்கப்படாத 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது கியூர்.பிட் நிறுவனம்.
ஹிரித்திக் ரோஷன்
இது 5 வருட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்த தொகை ஹிரித்திக் ரோஷனுக்கு அளிக்கப்படும் பங்குகள், ஹிரித்திக் ரோஷனின் பிட்னஸ் பிராண்டான HRX's சேவைகளை கியூர்.பிட் நிறுவனத்தில் பயன்படுத்துவதற்கான ராயல்டி மற்றும் விளம்பரங்களும் கொடுக்கப்படும் அனைத்தையும் சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கல்ட்டு பிட்னெஸ்
HRX's பிராண்ட சேவைகள் அனைத்து கியூர்.பிட் நடத்தும் கல்ட்டு பிட்னெஸ் சென்டர் அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.
250 கோடி
இதன் மூலம் கியூர் பிட் அடுத்த வரும் ஆண்டுகளில் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை பெறும் என எதிர்பார்க்கிறது.