மத்திய அரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷனின் கீழ் நீங்கள் குறைந்தபட்ச சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என்று நினைப்பவர் என்றால் உங்களுக்கு இது துக்கச் செய்தி.
மத்திய அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தினை 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. முன்பு இதன் மீதான கோரிக்கையினை மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதாகக் கூறி வந்தது.
குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வு இல்லை தேசிய ஒழுங்கமைப்புக் குழுவால் சம்பள உயர்வைப் பற்றிக் கலந்துரையாடல்கள் குறைந்தபட்ச சம்பள உயர்வும் இருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் கோரிக்கைக்குச் செவி சாய்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளது. எனவே இதில் மாற்ற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
தேசிய ஒழுங்கமைப்புக் குழுவால் சம்பள உயர்வைப் பற்றிக் கலந்துரையாடல்கள் குறைந்தபட்ச சம்பள உயர்வும் இருந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் கோரிக்கைக்குச் செவி சாய்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளது. எனவே இதில் மாற்ற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் 18,000 ரூபாய்
ஊழ்யர்கள் சங்களின் கோரிக்கையினை ஏற்காது மத்திய அரசு 18,000 ரூபாய் தான் குறைந்தபட்ச ஊதியம் என்று அறிவித்துள்ளது. ஆனால் ஊழியர்கள் சங்கம் 26,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.
பொதுத் துறை நிறுவனங்கள்
பொதுத் துறை நிறுவனங்களும் 26,000 ரூபாயாகக் குறைந்த பட்ச ஊதியத்தினை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து வந்தன. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதனை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
ஏமாற்றம்
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 7 வது சம்பள கமிஷனை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கூட்டத்தினைக் கூட்டி பெறப்பட்ட கொடுப்பனுவுகள் மீதான கோரிக்கையிலும் மத்திய அரசு ஏமாற்றத்தினைத் தான் அளித்துள்ளது. அதுவே இப்போது அடிப்படை ஊதியத்திலும் நடந்துள்ளது.