நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் வாங்க போட்டி போட்டு வரும் நிலையில் ஜாப்பான் நாட்டின் சாப்ட்பேங்க்-யிடம் சுமார் 2.5 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.
சாப்ட் பேங்க்
சாப்ட்பேங்க் நிறுவனம் தொழில்நுட்ப மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்காக சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகை ஒதுக்கியுள்ளது.
இதில் நிதியில் இருந்து உலக முழுவதிலும் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வந்த பிளிப்கார்ட், இந்தியாவில் மிகப்பெரிய தொகையை தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
பிளிப்கார்ட்
சாப்ட்பேங்க் செய்த முதலீடு குறித்து பிளிப்கார்ட் கூறுகையில், Softbank Vision Fund மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5-2.6 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் பிளிப்கார்ட்-இல் அதிகம் முதலீடு செய்த முதலீட்டாளர் என்ற பெயரை சாப்ட்பேங்க் பெற்றுள்ளது என பிளிப்கார்ட் கூறியுள்ளது.
டைகர் குளோபல் மேனேஜ்மென்ட்
பிளிப்கார்ட் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக்கம் செலுத்தி வந்த டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், தற்போது சாப்ட்பேங்க் முதலீட்டு மூலம் இந்த நிலை மாறியுள்ளது.
மைக்ரோசாப்ட்
சமீபத்தில் பிளிப்கார்ட், மைக்ரோசாப்ட், டென்சென்ட், ஈபே நிறுவனங்ளின் வாயிலாக சுமாக் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது குறிப்பிடத்தக்கது.
பண இருப்பு
தற்போதைய நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சுமார் 4 பில்லியன் டாலர் பணமாக வைத்துள்ளது.