ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தினைச் செலுத்தும் முறையினை அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்தது.
இந்த முறையினை இணையதளம், செயலி என ஐஆர்சிடிசி சேவையில் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பெறலாம். தட்கல் டிக்கெட் என்பது கடைசி நேரத்தில் வெளியூர் செல்ல முடிவு செய்தவர்கள் ஒரு நாள் முன்பு முன்கூடியே புக் செய்யப்படும் டிக்கெட் ஆகும்.
மேலும் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது அடையாள எண் குறிப்பிட வேண்டும் என்றும் பயணம் செய்யும் போது அதனைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
எனவே தட்கல் ரயில் டிக்கெட் பற்றிய முழு விவரங்களை இங்குக் காணலாம்.
எல்லாம் பொய்
2017-ம் ஆண்டு முதல் ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் புக் செய்யப் புதிய கட்டணம் முறை என்று குறியது எல்லாம் பொய் என்றும் ஆதாரம் இல்லாத தகவல் என்றும் ஐஆர்சிடிசி நிர்வாகம் கூறியுள்ளது. இது ரயில் பயணிகள் இடையில் பல குலப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கான காலம்
தட்கல் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான நேரங்கள் 2015-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் படி ஏசி டிக்கெகள் காலை 10:00 முதலும், ஏசி இல்லாத தட்கல் டிக்கெட் 11:00 முதலும் புக் செய்ய முடியும். இந்த நேரத்தில் செயலி மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.
ரத்து செய்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது
தட்கல் முறையில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது ரத்து செய்தால் கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதில் எந்த மாற்றமும் தற்போது இல்லை.
இரண்டு பணம் செலுத்தும் முறை
அன்மையில் ஐஆர்சிடிசி நிறுவனம் இரண்டு புதிய பணம் செலுத்தும் முறையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுப் பிரிவு டிக்கெட் புக் செய்யும் போது கட்டணம் செலுத்தலாம்.
இ-பேலேட்டர்
இந்த இ-பேலேட்டர் முறையில் பணத்தினைச் செலுத்தும் முறையினை அர்த்தஹஸ்தரா ஃபிண்டெக் நிறுவனம் வழங்குகின்றது.
கூடுதல் செலவு எவ்வளவு
இ-பேலேட்டர் சேவையினைப் பயன்படுத்தி முன்கூடியே டிக்கெட் புக் செய்த பிறகு டிக்கெட் கட்டணத்தினைத் திருப்பிச் செலுத்தும் பொது 3.50 சதவீத டிக்கெட் கட்டணட்தினை கூடுதலாக வரியுடன் செலுத்த வேண்டும். இதனைப் பயன்படுத்தி மக்கள் பயன்பெற இணையதளத்தில் டிக்கெட் செய்யும் போது இதன் விவரங்கள் மற்றும் தேர்வு செய்யும் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பே ஆன் டெலிவரி
இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது எப்படி டெபிட், கிரெடிட், இணையதள வங்கி சேவையின் மூலம் டிக்கெட் புக் செய்வது பொன்றே பே ஆன் டெலிவரி சேவையிலும் கட்டணம் செலுத்த முடியும்.
புக் நவ் பே லேட்டர்
புக் நவ் பே லேட்டல் முறையில் டிக்கெட் புக் செய்த 24 மணி நேரத்தில் பயணம் செய்யும் போது மின்னஞ்சலுக்கு வரும் இணைப்பை கிளிக் செய்து பணத்தினைச் செலுத்தலாம். டிக்கெட் ரத்துச் செய்தாலும் ரத்துச் செய்ததற்கான கட்டணத்தினைச் செலுத்த வேண்டும்.
ரத்துக் கட்டணம் எவ்வளவு இருக்கும்
புக் நவ் பே லேட்டர் சேவையில் புக் செய்த டிக்கெட்டினை ரத்து செய்யும் போது 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒருவேலைச் செலுத்த மறுத்தால் உங்களது ஐஆர்சிடிசி கணக்கு நீக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications