மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை என இரண்டிலும் சோதனை செய்யப்பட்ட 331 நிறுவனங்களில் 100 பொலி நிறுவனங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகச் செபியிடம் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த 100 நிறுவனங்களில் ஆய்வு செய்ய விரைவில் தணிக்கையாளர்கள் நியமனம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தடை
மொத்தம் 331 சந்தேகத்திற்குட்பட்ட நிறுவனங்களில் பிற நிறுவனங்களில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை, பரிமாற்றத்தில் இருந்தும் இந்த நிறுவனங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன.
விளம்பரதாரர்கள்
இதன் மீதான சிக்கல் தொடரும் வரை விளம்பரதாரர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து சந்தேக நபர்களிடமிருந்தும் வர்த்தகச் சந்தைகள் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குட்பட்ட நிறுவனங்கள்
சந்தேகத்திற்குட்பட்ட 331 நிறுவனங்களில் 162 நிறுவனங்கள் மும்பை பங்கு சந்தையில் பட்டியிலடப்பட்டுள்ளன. 154 நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன.
24 நிறுவனங்கள்
24 நிறுவனங்களில் ஒரு ரூபாய்க்குக் கூட விற்பனை இல்லை என்று சென்ற நிதி ஆண்டில் பங்கு சந்தையில் தரவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும், சில்லறை மற்றும் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் இந்த நிறுவனங்களில் 95 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
வங்கிகளில் உள்ள மார்ஜின்
பங்குச் சந்தைக்கான மார்ஜினை வங்கிகள் வைத்து இருந்தாலும் சில வங்கிகள் ஏற்கனவே வராக்கடனில் அவதிப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் தரப்புப் பயத்தில் உள்ளன.
ஆட்டம் காணும் சந்தை
இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் போலி நிறுவன பங்குகளை உடனடியாக விற்க முயல்வதினால் சந்தை ஆட்டம் காணும்.