மத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காகச் சுமார் 81 லட்ச ஆதார் எண்களை டீஆக்டிவேட் செய்யதுள்ளது. இன்றைய நிலையில் மத்திய அரசு அனைத்துச் சேவைகளும் மானியங்களும் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் குழப்பத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் கொடுத்துள்ளது.
இந்நிலையில் குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள நீங்கள் முதலில் உங்களுடைய ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா அல்லது டீஆக்டிவேட் நிலையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கான வழிக்காட்டி தான் இந்தக் கட்டுரை..
படி 1
முதல் நீங்கள் ஆதார் அமைப்பான UIDAI-இன் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
இணையதள இணைப்பு உங்களுக்காக: https://uidai.gov.in/
படி 2
இதில் ஆதார் சேவைகள் பட்டியலின் கீழ் இருக்கும் வெரிபை ஆதார் நம்பர் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
இதன் பின்பு புதிய டேப் ஒன்று திறக்கும்
படி 3
இந்தப் புதிய இணையப் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும்.
அடுத்து அதில் இருக்கும் செக்கூரிட்டி கோடை பதிவிட வேண்டும்.
தத்தம் தகவல்களைப் பதிவிட்ட பின்பு வெரிபை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
படி 4
இதே பக்கத்தில் உங்கள் ஆதார் கார்டு ஆக்டிவாக உள்ளதா அல்லது டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
படி 5
ஆக்டிவாக இருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம்.
டீஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால், அருகில் இருக்கும் ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு நீங்கள் செல்ல வேண்டும். போகும் முன் தக்க ஆவணங்களைக் கொண்டு செல்லுங்கள்.