வேலை வேண்டுமா? 2018-ம் ஆண்டு இந்தத் துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பத்தின் தரவுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு துறையில் புதிய நிறுவனங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் வாலெட்டுகளை அறிமுகம் செய்தல் மற்றும் தொழிற்நுட்பத்திற்கான தேவையினை அதிகரிப்பது மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துனர்களின் வளர்ச்சி போன்றவற்றால் வேலை வாய்ப்புகள் 2018-ம் ஆண்டு 20 லட்சம் நபர்களுக்குக் கிடைக்கும் என்று ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன.

 

இதுவே 2021-ம் ஆண்டு 5ஜி, எம்2எம் வருகையினால் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 8,70,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

வேலைக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

தற்போது இந்தத் துறையில் இருப்பதினை விட மனிதவளத்திற்கான தேவை அதிகளவில் இருக்கும் என்றும் அதிலும் இதைச் சார்ந்த திறன் வைத்துள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

புதுப்பிப்புகளைப் புகுத்த வேண்டும்

புதுப்பிப்புகளைப் புகுத்த வேண்டும்

ஒருபுறம், சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், பயன்பாட்டு டெவலப்பர்கள், விற்பனை நிர்வாகிகள், உள்கட்டமைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், கைப்பேசி தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு பாத்திரங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மனிதவளத்தை அடையாளப்படுத்த வேண்டிய திறமை உள்ள இடைவெளியை இணைக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களில் பணிபுரியும் மனிதவள மேம்பாட்டிற்கான புதுப்பிப்புகளை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

திறமைசார் கவுன்சில்
 

திறமைசார் கவுன்சில்

டெலிகாம் துறையின் திறமைசார் கவுன்சில் டெலிகாம் துறையின் கோரிக்கைகளையும் திறன் தேவைகளையும் பூர்த்திச் செய்ய அமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

வேலைவாய்ப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆனாலும் இந்தத் துறைக்குத் தேவையான குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொள்வது, தற்போதுள்ள மனிதவள சக்தி திறன்களை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக இடையறாத வளர்ச்சியை உறுதி செய்கின்றது.

தொலைத்தொடர்பு துறையின் பங்களிப்பு

தொலைத்தொடர்பு துறையின் பங்களிப்பு

கடந்த சில ஆண்டுகளில், வாடிக்கையாளர்கள் அளவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு துறையின் பங்களிப்பு 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், வருவாய் முன்னேற்றம் 7.07 சதவீதமாக உள்ளதாகச் சிகர்(CAGR) அறிக்கை தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

டிஎஸ்பி (தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்) தங்களது நெட்வொர்க்குகளில் முதலீடு செய்த கட்டமைப்பினை நவீனமயமாக்கிக் கொண்டு இருக்கின்றனர். 2017-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 85,003 கோடி வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

வருவாய்

வருவாய்

அதே நேரம் பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வருவாய் பல மடங்கு சரிந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. 6000 கோடி ரூபாய் வருவாய் பெற்று 900 கோடி ரூபாய் வரை தான் வருவாய்ப் பெற்றுள்ளதாகச் சில நிறுவனங்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecommunications sector to generate 30 lakh jobs by 2018: Study

Telecommunications sector to generate 30 lakh jobs by 2018: Study
Story first published: Thursday, August 17, 2017, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X