இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் ஷிக்கா ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை காலை 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
விஷால் ஷிக்கா ராஜினாமாவிற்கு நிறுவனர் நாராயண மூர்த்தித் தவறாக வழிநடத்தியது தான் என்றும் இன்ஃபோசிஸ் நிர்வாகம் கூறிவருகின்றது.
பங்குகளைத் திரும்ப வாங்குதல்
இன்ஃபோசிஸ் நிறுவனம் 11,30,43,478 கொடி பங்குகளை 4.92 சதவீதம் வரை கூடுதலாகச் செலுத்தி பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. எனவே ஒரு பங்கின் விலை 1,150 ரூபாய் என இன்ஃபோசிஸ் நிறுவனம் வாங்கும் என்று கூறப்படுகின்றது.
பங்கின் தற்போதைய விலை
பைபேக் திட்டம் மூலம் பங்குகளைத் திரும்ப வாங்குவதன் மொத்த அளவு 20.51 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் பங்கு சந்தை முடியும் போது 923.10 ரூபாயாக ஒரு பங்கின் விலை சரிந்து காணப்பட்டது.
பிரீமியம் விலை கொடுத்து வாங்க முடிவு
தற்போது பங்குகளைத் திரும்பப் வாங்கும் போது 19.08 சதவீதம் பிரீமியம் விலை கொடுத்து வாங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது கடந்த மூன்று மாத சந்தை விலையின் சரராசியைப் பொருத்தும் அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத அறிவிப்பு
ஏப்ரல் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 13,000 கோடி ரூபாய் அல்லது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை 2018-ம் ஆண்டு டிவிடெண்ட் மற்றும் பைபேக் திட்டம் மூலம் வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தது.
தேவைக்கு அதிகமான பணம்
இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 6.1 பில்லியன் டாலர் அளவுக்குக் கூடுதலாகப் பணம் தேவைக்கும் அதிகமாக வைத்துள்ளது தெரிவதாக வல்லுநர்கள் கூறிகின்றனர்.
பிற முக்கிய நிறுவனங்கள்
இன்ஃபோசிஸ் போன்று டிசிஎஸ் நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்கியுள்ளது, விப்ரோ நிறுவனம் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பைபே திட்டம் மூலம் திரும்ப வாங்கியுள்ளது, எச்சிஎல் நிறுவனமும் 3.50 கோடி பங்குகளைத் திரும்ப வங்க முடிவு செய்து அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications