ஜெர்மன் நாட்டு விளையாட்டு ஆடை மற்றும் காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான அடிதாஸ், இந்தியாவில் தனது செலவுகளைக் குறைக்க முடிவு செய்யதுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் எண்ணிக்கையும், பிரான்சைஸ் அளிக்கப்பட்ட உரிமைகளையும் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அடிதாஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அடிதாஸ்
இந்தியாவில் அடிதாஸ் நிறுவனம் ரீபோக் நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது, இப்பிரிவு வத்தகத்தில் இருக்கும் 4இல் ஒரு பங்கு ஊழியர்களை வெளியேற்றவு, தனது பிரான்சைஸ் வர்த்தகத்தில் பாதி வர்த்தகத்தை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்திம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அடிதாஸ் இந்தியா
ஊழியர்களின் பணிநீக்கம் குறித்த கேள்விக்கு, அடிதாஸ் இந்தியா கூறுகையில் தொடர்ந்து இந்தியாவில் வர்த்தகம் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்யவே திட்டமிட்டு வருகிறோம். ஆனால் ஊழியர்கள் வெளியேற்றம் குறித்து எவ்விதமான தகவல்கள் கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளது.
ஒப்புதல்
சமீபத்தில் அடிதாஸ் நிறுவனம் இந்தியாவில் சொந்தமான கடைகளைத் திறக்க DIPP அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
அடிதாஸ் தற்போது செய்துள்ள திட்டத்தின் படி அனைத்து பொருட்களும் ஓரே இடத்தில் கிடைக்கும் வகையில் லாபத்தை அளிக்கக் கூடிய பெரிய அளவிலான கடையைத் திறக்க முடிவு செய்துள்ளது.
பிரான்சைஸ்
சொந்த கடையைத் திறக்கும் காரணமாக அடிதாஸ் அளித்துள்ள 500 பிரான்சைஸ் கடைகளில் 70 கடைகளை மூடவும், இதில் கணிசமான கடைகளை ரிலையன்ஸ் பிராண்டுக்கு கைமாற்றிவிடவும் திட்டமிட்டுள்ளது அடிதாஸ்.
ஊழியர்கள்
அடிதாஸ் இந்தியாவின் இத்தகைய நடவடிக்கையால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களில் 25 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.