நாட்டின் மறைமுக வரியை முழுமையாக ஜிஎஸ்டி மூலம் மாற்றிய மத்திய அரசு, தற்போது 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளது.
நேரடி வரி விதிப்பை மாற்ற முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட முயற்சி செய்து, கடைசியில் அமலாக்கம் செய்ய முடியாமல் தோற்றுப்போனது. இந்நிலையில் இந்த முயற்சியை தற்போது மோடி தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது.
டிடிசி வரி விதிப்பு
2009ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டிடிசி வரி விதிப்பில் அனைத்து விதமான வருமானங்களின் மீதும் வரி விதிக்கப்பட்டது. குறிப்பாக வைப்பு நிதி மீதான வருமானம், பிபிஎப் முதலீடு, பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் என அனைத்தின் மீதும் வரி விதிக்கப்பட்டது.
ஆனால் அடிப்படை விரி விதிப்பின் தொகை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் ரூபாய்
டிடிசி வாயிலாகவே வரி விதிக்கப்பட்டால், குறைந்தப்பட்சம் வரி விதிப்பு அளவு 5 லட்சமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. காரணம் அனைத்து முதலீட்டு திட்டத்தின் மீதும் வரி விதிக்கப்படுவதால் அடிப்படை வரி விதிப்பு அளவு சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது.
தற்போது இதன் அளவு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப கட்ட ஊழியர்கள்
வருடாந்திர வருமானத்தில் 5 லட்ச ரூபாய்க்கு வருமான விலக்கு அளித்தால், நாட்டில் அதிகமாக இருக்கும் ஆரம்பகட்ட ஊழியர்கள் அதிகளவில் பயன்அடைவார்கள்.
மத்திய அரசு
நேரடி வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வரும் அடிப்படை வரி விதிப்பு அளவை பொருத்தே அனைத்து விதமான லாபங்களும் கிடைக்கும். 5 லட்சம் ரூபாய் இல்லாமல் பிற அனைத்து முதலீட்டு திட்டத்திலும் வரியை விதித்தால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
ஜிஎஸ்டி
மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி-யை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தில் சிறிதளவிலான மாற்றம் மட்டுமே செய்து அமல்படுத்து. இதில் வரி விதிப்புகள் அளவு மட்டுமே மாற்றப்பட்டதாகவும், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மட்டுமே வித்தியாசம் அளிக்கப்பட்டது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications