7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக ஆக உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 1 சதவீதம் உயர்த்தி 5 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் மத்திய அரசு அகவிலை நிவாரணத் தொகையினையும் 1 சதவீதம் உயர்த்தி 4 சதவீதமாக அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான மத்திய அமைச்சகத்தின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விவரங்களைக் கீழே பார்ப்போம்.

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்றால் என்ன?

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியினை உயர்த்தி அதனைச் சமாளிப்பதாகும். இது காலத்திற்குத் தகுந்தார் போல மாறும்.

ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படியை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

 

புதிய விகிதம் எப்போது முதல்?

புதிய விகிதம் எப்போது முதல்?

அகவிலைப்படி 1 சதவீதம் உயர்த்தி 5 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட்டி விகிதமானது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றது.

எவ்வளவு செலவு

எவ்வளவு செலவு

மத்திய அரசின் இந்த முடிவால் ஆண்டுக்குக் கூடுதலாக 3,068.26 கோடிகள் வரை செலவாகும். இதுவே 2017-2018 நிதி ஆண்டில் ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரை 2,045.50 கோடிகள் செலவாகும்.

எவ்வளவு பேருக்கு நன்மை?

எவ்வளவு பேருக்கு நன்மை?

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்ச ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள்.

 பண வீக்கம்

பண வீக்கம்

அகவிலைப்படியினை 1 சதவீதம் அதிகமாக உயர்த்துவதால் பணவீக்கம் பெறும் அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன்

7வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின் கீழ் மத்திய அரசு அகவலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது.

தனியார் ஊழியர்களே அடித்தது ஜாக்பாட்..

தனியார் ஊழியர்களே அடித்தது ஜாக்பாட்..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+