இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கித் துறையில் சுமார் 30 சதவீத வேலைவாய்ப்புகள் அடுத்த 5 வருடத்தில் மாயமாகும் என விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.
சிட்டிகுரூப் இன்க் நிறுவனம் பல்வேறு நிதிசிக்கலில் இருந்தபோது அதனை மீண்டும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வந்தவர் விக்ரம் பண்டிட். இவருடைய இந்தக் கணிப்பு வங்கித்துறை அதிகாரிகள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி ஊழியர்கள்
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் வங்கியில் தினசரி பணியில் பேக் ஆபிஸ் வேலைகளில் ஈடுபடுவோரின் வேலையை முழுமையாக நீக்கிவிடும். இதன்படி அடுத்த 5 வருடத்தில் வங்கித்துறையில் 30 சதவீத வேலைவாய்ப்புகள் மாயமாகும் என விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம்
தற்போது விக்ரம் ஓரோஜென் குரூப் என்னும் முதலீடு நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இதற்கு முன்னதாக அதாவது 2007-2012ஆம் ஆண்டுக் காலத்தில் சிட்டிகுரூப் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தார்.
வால் ஸ்ட்ரீட்
அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைத் தாண்டி மெஷின் லேர்னிங், கிளவுட் கம்பியூடிங் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான பணியை ஆட்டோமேட் செய்துள்ளது.
இதன் மூலம் ஊழியர்களை வெளியேற்றியும், புதிய வேலையைத் தேட வற்புறுத்தியும் வருகிறது.
பாங்க ஆஃப் அமெரிக்கா
சமீபத்தில் பாங்க ஆஃப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரியான டாம் மான்டேங் கூறுகையில், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் புதிய தொழில்நுட்ப உதவியை நாடி வருகிறோம் எனத் தெளிவான திட்டத்தை அறிவித்தார்.
இந்தியாவில்..
அமெரிக்காவில் ஏற்கனவே அதிகப்படியான பணிகள் ஆட்டோமேட் செய்யுப்பட்டுள்ள நிலையிலேயே 30 சதவீத வேலைவாய்ப்புகள் இழக்க நேரிடும் நிலையில், இந்திய வங்கிகளில் இன்று வரை பெரும்பாலான பணிகள் பேப்பர் வாயிலாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வங்கிகள்
இந்தியாவில் தனியார் வங்கிகள் தான் தற்போது அதிகளவிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், தனியார் வங்கிகளில் கூடிய விரைவில் அதிகப்படியான ஆட்குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் கணிப்புகள் கூறுகிறது.
ஐடி துறை..
ஆட்டோமேஷன் பிரச்சனை ஐடி துறையை அடுத்தத் தற்போது வங்கித்துறையிலும் நுழைந்துள்ளது.
புதிய பேமெண்ட் வங்கி
புல்லட் ரயில்
எப்படி..?
உஷாரான இந்தியர்கள்
ஆற்று மணல்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications