டெல்லி: இந்திய வங்கித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் போல, தற்போது டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகவேகமாக வளர்ந்து வரும் இந்திய டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையில் தானும் பங்குபெற வேண்டும் எனத் திட்டமிட்ட கூகிள், புதிய யூபிஐ செயலியை அடுத்தச் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
Tez செயலி
ஆல்பெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இருக்கும் கூகிள் நிறுவனம் வருகிற செப்டம்ர் 18ஆம் தேதி Tez என்னும் யூபிஐ செயலியை அறிமுகம் செய்து, வளர்ந்து வரும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு
தேஜ் என்றால் ஹிந்தியில் வேகம் எனப் பொருள். கூகிள் அறிமுகம் செய்ய உள்ள இந்தப் பேமெண்ட் செயலி, ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கக்கூடியவை எனக் கூகிள் தெரிவித்துள்ளது.
யூபிஐ
மொபைல் தளத்தில் இருந்து இரு வங்கிகளுக்கு மத்தியில் பணப் பரிமாற்றம் செய்ய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் நேஷ்னல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) யூபிஐ செயலியை அறிமுகம் செய்தது.
இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி வங்கிகளும் இச்சேவையைத் தற்போது அளிக்கும் நிலையில், பன்னாட்டு நிறுவனமான கூகிள் இச்சேவையைத் தற்போது அளிக்க முடிவு செய்துள்ளது.
வாட்ஸ்அப்
அதுமட்டும் அல்லாமல் கூகிள் நிறுவனத்துடன் போட்டிபோடும் வகையில், பேஸ்புக் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனமும் யூபிஐ செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பிற நிறுவனம்
மெசேஜிங் சேவை அளிக்கும் வீசேட் மற்றும் ஹைக் மெசேஜ்சர் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே யூபிஐ செயலி வழியான பணப் பரிமாற்ற சேவையை வழங்கும் நிலையில் தற்போது வாஸ்ட்அப் நிறுவனமும் இதன் வரிசையில் இறங்க உள்ளது.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications