நாட்டின் முன்னணி கல்லூரிகளான ஐஐடி மாணவர்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் பல அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்கியது. ஆனால் இதில் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் அமெரிக்கா செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தற்போது அமெரிக்கா விசா பாலிசியை ஆய்வு செய்ய டிரம்ப் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி மாணவர்கள்
இத்தகைய சூழ்நிலையில், தற்போது ஐஐடி மாணவர்களுக்கு வேலைக் கொடுத்த நிறுவனங்கள் அனைத்தும் அவர்களைப் பணியில் அமர்த்தப் பல முயற்சிகளைச் செய்தாலும் முடியாத சூழ்நிலையில் நிறுவனங்கள்.
கோடி.. லட்சம்..
இதனால் அமெரிக்காவில் கோடிகளில் சம்பளத்தில் பணி ஆணையைப் பெற்ற மாணவர்கள் தற்போது இந்தியா நிறுவனங்களில் சில லட்சங்களுடன் பணியாற்றுகின்றனர்.
டாலர் கனவு
சில பெரிய நிறுவனங்கள் ஐஐடி மாணவர்களைத் தற்போது அமெரிக்கா அல்லாமல் சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தில் பணியில் அமர்த்துகிறது.
வாய்ப்புகள்
இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்த ஜப்பான், தைவான், கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தற்போது ஐஐடி மாணவர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது.