ஜியோ உடன் போட்டிபோட 32,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஏர்டெல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் ஜியோ உடனான போட்டியில் தனது சேவை கட்டணத்தை அதிகளவில் குறைத்தது. இதன் காரணமாக ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள 32,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

 

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடபோன் ஆகியவை இணைப்பு பணிகளில் ஈடுப்பட்டு இருப்பதால், வர்த்தக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிகளவிலான கவனத்தை செலுத்தவில்லை.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது ஏர்டெல்.

 

ஏர்டெல் முயற்சி

ஏர்டெல் முயற்சி

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 32,000 கோடி ரூபாய் முதலீட்டில் தனது நெட்வொர்கை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜியோ

ஜியோ

இலவச சேவை அறிமுகத்தின் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்ற நிலையில், தற்போது தொடர்ந்து தனது கட்டணத்தை உயர்த்தி வருவது மட்டும் அள்லாமல், தற்போது இந்நிறுவனத்தின் சேவையின் தரம் தொடர்ந்து குறைந்த வண்ணமாகவே உள்ளது.

திட்டம்..
 

திட்டம்..

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக பணமாக்கிக்கொள்ள 32,000 கோடி ரூபாயில் வலிமையான மற்றும் விரிவாக்கமான நெட்வொர்க்கை அமைக்க உள்ளது.

ஸ்பெக்ட்ரம்..

ஸ்பெக்ட்ரம்..

இதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் நிறுவனம் 800 மெகாஹெட்ஸ் பான்ட்யை அதிகளவில் வாங்கவும் அடுத்து நடக்கும் ஏலத்திற்கான தனியாக நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel plans to spend over Rs 32,000 crore

Airtel plans to spend over Rs 32,000 crore - Tamil Goodreturns | ஜியோ உடன் போட்டிபோட 32,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஏர்டெல்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Wednesday, September 20, 2017, 0:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X