நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி குறைவான வேலைத்திறன், டிஜிட்டல் சேவை மேம்பாடு, ஊழியர்களின் வேலைத்திறனை மேம்படுத்துதல் எனப் பல்வேறு காரணங்களுக்காக 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது யெஸ் வங்கி.
யெஸ் வங்கி
இந்தியாவில் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்தும் வகையில், பல சேவையை டிஜிட்டல் முறையாக்கியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளும் தற்போது மிகப்பெரிய செலவின குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள காரணத்தால் ஊழியர்களின் பணிநீக்கம் அதிகமாக உள்ளது.
இத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பதில் யெஸ் வங்கி ஊழியர்களும் அடங்குவர்.
21,000 ஊழியர்கள்
எச்டிஎப்சி வங்கியைத் தொடர்ந்து தனியார் வங்கித் துறையில் யெஸ் வங்கி சுமார் 21,000 ஊழியர்களை முழுமையாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
எச்டிஎப்சி வங்கி
இந்திய சந்தையில் அதிகமதிப்புடைய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி மார்ச் 2017ஆம் காலாண்டு வரையில் சுமார் 11,000 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கி துறை
இந்திய வங்கித்துறையில் தற்போது ஊழியர்களின் வெளியேற்றத்தின் விகிதம் தற்போது 16-22 சதவீதமாக உயர்ந்துள்ளது.