ஐஆர்சிடிசி மற்றும் வங்கி நிறுவனங்கள் இடையில் ஏற்பட்ட தேவையில்லாத கட்டணம் குறித்த சண்டையினால் 6 வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள் தவிரப் பிற வங்கிகளின் கார்டுகளில் ரயில் டிக்கெட் வாங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
ரயில் டிக்கெட் புக் செய்யும் போது அனைவரும் விரும்பி புக் செய்யும் இணையதளம் என்றால் அது ஐஆர்சிடிசி தளமே ஆகும். அதில் டிக்கெட் புக் செய்யும் போது செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
சுறு சுறுப்பாக இயங்கும் இணையதளம்
இந்தியாவில் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்தத் தளத்தின் செயல்பாட்டுக் கட்டண வசூல் மீது தற்போது வங்கிகள் கண் வைத்துள்ளன. அதன் ஒரு கட்டமாக ஐஆசிடிசி நிறுவனம் வங்கிகள் வசூலிக்கும் பயன்பாட்டுக் கட்டணத்தில் 50 சதவீதத்தினைத் தங்களுக்கு அளிக்க வேண்டும் கோரிக்கை வைத்தது
மறுத்த வங்கிகள்
இதற்கு வங்கிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்திய ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய பாங்க், மத்திய வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளைத் தவிரப் பிற வங்கி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாதபடி ஐஆர்சிடிசி இணையதளத்தில் நீக்கியுள்ளது.
பயன்பாட்டுக் கட்டணம் எவ்வளவு
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து ஐஆர்சிடிசி நிறுவனம் 20 ரூபாய் பயன்பாட்டுக் கட்டணத்தினை நீக்கியது.
எஸ்பிஐ வங்கி
ஐஆர்சிடிசி நிறுவனம் எஸ்பிஐ வங்கியை தங்களது இணையதளத்தில் இருந்து நீக்கியதை அடுத்து தினமும் 50,000 பரிவர்த்தனைகள் வரை குறைந்துள்ளதாகக் கூறுகின்றது.
பிற வங்கி பயனர்கள் என்ன செய்வது?
இதுவே பிற வங்கி பயனர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் இணையதள வங்கி சேவை மூலமாக மட்டும் தான் புக் செய்ய முடியும்.
வணிகத் தள்ளுபடி விகிதம்
தற்போது வங்கிகள் MDR எனப்படும் வணிகத் தள்ளுபடி விகிதத்தினை 1000 ரூபாய்க்கும் குறைவாகப் பரிவர்த்தனை செய்யும் போது 0.25 சதவீதம் வரை வசூலிக்கலாம். இதுவே 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை 0.5 சதவீதமும், அதிகரிக்கும் அதிகம் என்றால் 1 சதவீதமும் மெர்ச்சண்ட் டிஸ்கவுன்ட் ரேட் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம்.