நாட்டின் முன்னணி ஈகமார்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சமீபத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இதில் பல குறைப்பாடுகள் இருந்தாலும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்திய என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம், மத்திய வணிக அமைச்சரக்கு முக்கிய கடிதம் எழுதியுள்ளது.
இக்கடிதத்தில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு முதலீட்டு விதிகளை மீறி ரிடைல் வர்த்தகத்தை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் அனைத்தும் சந்தைக விலைக்கு சற்றும் பொருந்தாத ஒன்றாக உள்ளது என குற்றசாட்டியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்களின் வர்த்தக முறையை பன்னாட்டு முதலீட்டு விதி முறைகளுக்கு பொருந்தாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.