நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமாக மாறிவரும் பதஞ்சலி நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவுகளை அதிகரிக்கச் சுமார் 1,000 கோடி ரூபாய் வரையிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காகப் பதஞ்சலி நிறுவனம் 2 முதலீட்டு வங்கிகளை நியமித்துள்ளது. இந்த 1000 கோடி ரூபாய் நிதியை உள்நாட்டு மட்டுமில்லாமல் வெளிநாடு சந்தையிலும் இருந்து திரட்ட முடிவு செய்யப் பதஞ்சலி நிறுவனம் இந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு உத்தவிட்டுள்ளது.
இரண்டு வங்கிகளில் ஒன்று ஹைத்ரபாத்-ஐ சோர்ந்த ஒரு நிறுவனமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அடுத்தச் சில மாதங்களில் பங்குச்சந்தைக்கு இறங்கத் திட்டமிடும் பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நுகர்வோர் சந்சையில் இருக்கும் தேவையைப் பூர்த்திச் செய்யும் நோக்கில் தனது உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. இதற்காகவே இந்த 1000 கோடி ரூபாய் முதலீடு.
இன்றைய நிலையில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 50 உற்பத்தி ஆலைகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.