இம்மாதம் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வங்கிகளுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வங்கி பரிமாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் நாளையே செய்வது நல்லது.
வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை உண்டு. அதுவே இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை நாட்களில் அரசு விடுமுறை என்பதால் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையும் சேர்த்து தொடர்ந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வார விடுமுறை
வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆய்த பூஜை விடுமுறை என்றும், 30-ம் தேதி வங்கி கள் திறக்கப்பட வேண்டும் என்றாலும் விஜய தசமி காரணங்காளால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார விடுமுறை
பின்னர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், 2-ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி என்பதாலும் விடுமுறை ஆகும்.
ஏடிஎம்
பொதுவாக இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்றாலே மூன்றாம் நாள் வங்கிகளில் கூட்டம் அலை மோதும். அதுமட்டும் இல்லாமல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கிடைக்கத் திண்டாட்டம் ஆகும்.
ஆர்பிஐ கோரிக்கை
தற்போது நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஆர்பிஐ வங்கி நிர்வாகங்களிடம் ஏடிஎம் இயந்திரங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளது.
தீபாவளி விடுமுறை
அடுத்து தீபாவளி விடுமுறை அக்டோபர் 18ம் தேதி புதன் கிழமை வர இருப்பதால் வங்கி ஏடிஎம் சேவைகளில் பெரிதாகப் பாதிப்பு இருக்காது.
வங்கி விடுமுறைகள்
2017 ஆண்டு வங்கி விடுமுறை விவரங்களை முழுமையாகப் பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்.