மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் முன்னணியாக இருக்கும் ஐபிஎம் நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு பல தசாப்தங்களாக இயங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் அதிபரான டிரம்ப் கொடுத்தும் வரும் தொடர் நெருக்கடியால் ஆரக்கிள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவிற்கு வந்த நிலையில், தற்போது ஐபிஎம் நிறுவனமும் இந்தியாவை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளது.
அதிக ஊழியர்கள்
இந்தியாவில் மட்டும் ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 1,30,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இது இந்நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்களில் இருக்கும் ஒட்டுமொத்த ஊழியர்களின் 3இல் ஒரு பங்காகும்.
இந்தியா
இதன் மூலம் அமெரிக்காவை விட்டுவிட்டுத் தற்போது ஐபிஎம் இந்தியாவையும் ஆசிய சந்தையை மையமாக வைத்து இயங்கும் வகையில் தனது வர்த்தக முறையை மாற்றியுள்ளது. இதன் முதற்கட்டமே ஊழியர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வித்தியாசம்.
டிரம்ப் நெருக்கடி..
விசா கட்டுப்பாடுகள், அதிகளவிலான கார்பரேட் வரி எனத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்து வரும் டொனால்டு டிரம்ப் மற்றும் டிரம்ப் தலைமையிலான அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வர்த்தகத்திற்கும் மிகப்பெரிய தடையாக விளங்கி வருகிறது.
இதன் காரணமாகப் பல முன்னணி அமெரிக்க நிறுவனம் தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறி வருகிறது.
முக்கிய வாடிக்கையாளர்
ஐபிஎம் நிறுவனம் ஏடி அண்ட் டி நிறுவனத்தைத் தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களுக்கு முழுமையாக மென்பொருள் மற்றும் வன்பொருள் சேவையை அளித்து வருகிறது.
இந்தியா வர்த்தகம்
அதுமட்டும் அல்லாலமல் ஐபிஎம் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகம் மட்டுமே லாபகரனமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.