ஓவர் டைம் வேலை வாங்கிவிட்டு சம்பளம் கொடுக்காத வங்கி நிர்வாகம்.. ஊழியர்கள் கவலை..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாட்டின் பயன்பாட்டில் இருந்து 86 சதவீதம் ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர வேண்டிய பொறுப்பு வங்கிகள் மேல் விழுந்தது.

மக்களும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ரூபாய் நொட்டுகளை மாற்றிச் சென்றனர்.

தேவை மற்றும் ஊழியர்கள்

தேவை மற்றும் ஊழியர்கள்

மக்களுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகம் இருந்தது, போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருந்த காரணங்களால் வங்கி ஊழியர்கள் அதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கூடுதல் பணி நேரம்

கூடுதல் பணி நேரம்

சில நேரங்களில் வங்கி ஊழியர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை பார்த்து வந்தனர். மேலும் விடுமுறைகளும் வங்கி ஊழியர்களுக்கு அளிக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் பல வங்கி ஊழியர்கள் வேலை பழுவை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்தினால் இறந்தனர்.

 மோடியின் வாழ்த்து

மோடியின் வாழ்த்து

இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பணிபுரிந்த வங்கி ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மோடி அவர்கள் நன்றி என்று நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை என்பதுடன் முடித்துக்கொண்டார்.

 11 மாத காத்திருப்பு

11 மாத காத்திருப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து தற்போது 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு வங்கி கூடக் கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய கூடுதல் சம்பளத்தினை அளிக்கவில்லை.

கூடுதல் சம்பள பாக்கி

கூடுதல் சம்பள பாக்கி

பல வங்கி ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை வங்கி நிறுவனங்கள் சம்பளம் அளிக்க வேண்டிய பாக்கி உள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மணி நேரச் சம்பளம் எவ்வளவு

ஒரு மணி நேரச் சம்பளம் எவ்வளவு

ஊழியர்களின் சம்பளத்தினைப் பொருத்து கூடுதல் நேரம் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வங்கி நிர்வாகங்கள் சம்பளம் அளிக்கவேண்டும்.

வங்கி ஊழியர்கள் சங்கம்

வங்கி ஊழியர்கள் சங்கம்

அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிஎச் வெங்கட்டாசலம் இதுபற்றிக் கூறுகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் இல்லை என்றால் சட்டப்படி பெறுவதற்கான முயற்ச்சிகள் எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

 வங்கி நிறுவனங்கள்

வங்கி நிறுவனங்கள்

அதுமட்டும் இல்லாமல் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து இதுவரை ஒரு வங்கி நிறுவனமும் ஊழியர்களுக்குக் கூடுதல் நேரப் பணிக்கான சம்பளத்தினை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

 நாட்டின் நிலை

நாட்டின் நிலை

பிரதமர் மோடி அவர்கள் எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இது வரை பல எதிர் மறையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது இதுவும் சிக்கல் ஏற்படுத்தி வருகின்றது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து இன்னும் இந்திய மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+