இந்திய ரிசர்வ் வங்கி 2017 செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோரின் நம்பிக்கை சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தச் சர்வே முடிவுகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட 6 முக்கிய மெட்ரோ நகரங்களில் உள்ள 5,100 குடும்பங்களிடம் இருந்து பொதுப் பொருளாதார நிலைமை, வேலைவாய்ப்பு சூழ்நிலை, ஒட்டுமொத்த விலை நிலை மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிலைமை குறியீடு
வேலை வாய்ப்பு வழங்குவது, விலை நிலை மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவால் தற்போதைய நிலைமை குறியீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வருங்கால எதிர்பார்ப்பு குறியீடு
இதனால் வருங்கால எதிர்பார்ப்பு குறியீடும் ஜூன் 2017-ல் இருந்ததை விடச் செப்டம்பர் 2017-ல் சரிந்துள்ளது. அதாவது மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2017 வரை சரிவிலேயே உள்ளது.
வேலைவாய்ப்பு
தற்போது உள்ள இந்த மோசமான சூழலுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சரிவே முக்கியக் காரணம் என்றும் இது கடைசி இரண்டு சுற்று முடிவுகளின் மூலம் தெரிகின்றது.
பணவீக்கம்
ஆனால் அன்மை காலங்களில் விலை நிலை பித்தியிற் பெற்றுள்ளதால் கடைசி இரண்டு சுற்றுகளில் பணவீக்கம் இளகியுள்ளது. 27 சதவீதத்தினர் தங்களது வருவாய் 27 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
RBI Consumer Confidence Survey by Tamil GoodReturns on Scribd |
ஆர்பிஐ சர்வே முடிவுகள்
நுகர்வோரின் நம்பிக்கை சர்வேயின் முழு ஆர்பிஐ அறிக்கையினைக் கீழே இங்குக் காணலாம்.