ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி அடைந்து வருவதால் கூடுதலாக 75 விமானங்கள் வாங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆர்டர் செய்துள்ள விமானங்களில் ஒரு பகுதியினை 2018ம் ஆண்டி அறையாண்டிற்குள் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் எதிர்பார்க்கின்றது. மேலும் சில மாதங்களில் கூடுதல் விமானங்களை இணைக்கு முடிவு செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட ஆர்டர்
முதற்கட்டமாக ஆர்டர் செய்துள்ள 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு மட்டும் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்னை செலவு செய்துள்ளதாகவும், மேலும் பெரிய ஆர்டர் என்பதால் சலுகைகள் கிடைத்துள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
எதியாடு ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் அபுதாபி எதியாடு ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் பங்குகள் உள்ளதாகவும், இருவரும் சேர்ந்து 75 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அல்லது ஏர்பஸ் எஸ்ஈ320 நியோ வகையினை வாங்க இருப்பதாகும் தெரிகின்றது.
இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள்
இந்தியாவில் பயணிகள் விமானச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை ஆர்டர் செய்துள்ளன, இதனால் ஒரு பக்கம் விமான டிக்கெட் விலை குறைந்தாலும் வருவாய் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இரண்டாம் மிகப் பெரிய சேவையினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உலகளவில் வழங்கி வருகின்றது.