இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்காட் இணையதள டிக்கெட் புக் செய்யும் நிறுவனமான புக்மைஷோவில் முதலீடு செய்ய இருக்கின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தை துவக்க நிலையில் உள்ளதாகவும் பைக்மைஷோ தளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான பாங்குகளை வாங்க இருப்பதாக இது குறித்த விவரங்களைத் தெரிந்தவர்கள் நமக்குத் தெரிவித்தனர்.
ஜப்பானின் சாப்ட் பாங்க் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் புக்மைஷோ தளத்தின் மீதான பற்றிய கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
புக்மைஷோ நிறுவனம் மும்பையினைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிக்ட்ரீ நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆனால் இது குறித்த கேள்விக்கு இரண்டு நிறுவனங்களும் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.