விழாக் காலங்களில் சலுகை விலை பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்ததைத் தான் நாம் இதுவரை பார்த்து இருப்போம்.
ஆனால் 2017-ம் ஆண்டின் தீபாவளி சமயத்தில் 40 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணப் பற்றக்குறை
2017-ம் ஆண்டு ஆண்டு இந்த அளவிற்கு விற்பனை சரிந்து இருப்பதற்குப் பணப் பற்றாக்குறை தான் முக்கியக் காரணம் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
நாளை முதல் தீபாவளி கொண்டாட்டம் துவங்க உள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்துச் சந்தைகளும் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வரத்து குறைந்து உள்ளது.
விற்பனை சரிவு
2016-2017 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-2018 நிதி ஆண்டில் 40 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளதை காட்டுகின்றது என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்புக் கூறுகின்றது.
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததுள்ளதால் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் சந்தை மந்தமாக இருக்கக் காரணம் ஆகும்.
ஜிஎஸ்டி குழப்பம்
ஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கல் செய்வதில் வணிகர்களுக்குப் பெரும் அளவில் இன்னும் குழப்பம் நீடிக்கின்றது, இது வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, இந்த மாதம் இந்தக் குழப்பங்கள் ஓர் அளவிற்குக் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.