இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல நாடுகளிலும் இருந்து முதலீட்டை ஈர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு இந்தியாவில் உள்கட்டமைப்புக்கான நிதியை திரட்டும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்திடம் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைப்பின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பல நாடுகள் முதலீடு செய்வதாக ஒப்புதல் அளித்திருந்தாலும், முதன்முதலாக முதலீடு செய்தது அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில் 6 உள்நாட்டு முதலீட்டாளர்களையும் கொண்டுள்ளது. இதில் எச்டிஎப்சி ஸ்டான்டார்டு லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி அசர்ட் மேனேஜ்மென்ட், ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா ஓல்டு மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்த அமைப்பில் உள்ளது.