வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைக்க வேண்டாம் எனத் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான பதில் செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.
இதனால் மக்கள் மத்தியில் தற்போது புதிய குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய அரசு
அரசின் மானியத்தில் துவங்கி அனைத்து அரசு சேவைகள் என அனைத்திற்கும் தற்போது மத்திய அரசு ஆதார் எண்-ஐ கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களுக்குப் பலவிதமான பிரச்சனையை அளித்தாலும், வேறு வழி இல்லாமல் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமை
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியான தகவல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முற்றுப்புள்ளி
இந்தக் குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் "நாட்டில் பணச் சலவை மற்றும் மோசடி நடவடிக்கைகளை முழுமையாக நீக்குவதற்காக ஜூன் 1,2017 இல் அமலாக்கம் செய்யப்பட்ட 2வது திருத்தப்பட்ட விதிகளின் படி வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ கட்டாயம் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
இந்த அறிவிப்பை இறுதியாகவும், அவரச உத்தரவாக எடுத்துக்கொண்டு, வங்கிகள் ஆதார் உடனான இணைப்பைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications