துட்டு நிறைய இருக்கு, வா நாலு கம்பெனிய வாங்கி போடுவோம்.. பிளிப்கார்டின் அடுத்த அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்குப் பணத்தை இருப்பாக வைத்துள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி அமேசான் உடன் போட்டிபோடவும், தனது வர்த்தகத்தைப் புதிய துறையில் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.

தன்னிடம் இருக்கும் 4 பில்லியன் டாலர் அதாவது 26,000 கோடி ரூபாயை கொண்டு முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வாங்கவும் அல்லது பெரிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றவும் முடிவு செய்துள்ளது.

நாலு கம்பெனி

நாலு கம்பெனி

இதன் படி பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, சர்வீச்ஸ் நிறுவனமான அர்பன் கீளாப், ஆன்லைன் பர்னீச்சர் விற்பனை நிறுவனமான அர்பன்லேடர் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் சொத்து மேலாண்மை துறையில் சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

ஸ்விக்கி, அர்பன் கீளாப், அர்பன்லேடர் ஆகிய நிறுவனங்களுடன் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வரும் நிலையில், எவ்விதமான ஒப்பந்தமும் உறுதி செய்யப்படவில்லை.

புக் மை ஷோ

புக் மை ஷோ

சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யும் புக் மை ஷோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை 500-700 மில்லியன் டாலர் முதலீட்டில் கைப்பற்றியது.

2010 முதல் துவக்கம்..

2010 முதல் துவக்கம்..

2007ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட பிளிப்கார்ட் ஆரம்பத்தில் சற்று மந்தமான வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்தாலும், சில வருடங்களில் மளமளவென வளர்ச்சி அடைய துவங்கியது. இதனிடையில் பல்வேறு வென்சர் கேபிட்டல் நிறுவனத்திடம் இருந்து பல மில்லியன் டாலர் முதலீட்டை பெற்று தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.

முதலீடு ஈர்ப்பு

முதலீடு ஈர்ப்பு

இந்த வருடம் மட்டும் பிளிப்கார்ட் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்த்தது. இந்நிலையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 2010ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தைக் கைப்பற்ற துவங்கியது.

 வரிவாக்கம்

வரிவாக்கம்

பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு வீரீட் என்னும் நிறுவனத்தை முதல் முதலாகக் கைப்பற்றியது. அதன் பின் மைம்360, சக்பக்.காம், டெல்ஸ்பை.காம், மைந்திரா.காம், அப்பிடிரியேட், ஜபாங், போன்பே, டைனிஸ்டெப், ஈபே இந்தியா ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றியதுள்ளது.

15 பில்லியன் டாலர் சந்தை

15 பில்லியன் டாலர் சந்தை

இந்தியாவில் 15 பில்லியன் டாலர் சந்தையில் நீங்கா இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல் அமெரிக்க நிறுவனான அமேசானுக்குக் கடுமையான போட்டியை அளித்து வருகிறது.

11.6 பில்லியன் டாலர் மதிப்பு

11.6 பில்லியன் டாலர் மதிப்பு

வருடத்தி்கு 15,000 கோடி ரூபாய் வருமானம் பெறும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 11.6 பில்லியன் டாலர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart plans to more acquisitions

Flipkart plans to more acquisitions
Story first published: Monday, October 23, 2017, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X