இந்திய ஐடி நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் பல வர்த்தக ரீதியான பிரச்சனைகளைச் சந்தித்தாலும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான காலாண்டு முடிவுகளையே வெளியிட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் புதன்கிழமை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது செப்டம்பர் 30 வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
லாபம்
ஜூன் காலாண்டில் 2,171 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டில் 0.8 சதவீத உயர்வுடன் 2,188 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இது 2,014 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் அளவு 2.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 12,434 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சி
இன்போசிஸ் தனது வரத்த்க வளர்ச்சி அளவீட்டை 5.5 -6.5 சதவீதம் வரையில் குறைந்துள்ள நிலையில் ஹெச்சிஎல் இந்த வருடம் 10.5 -12.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
முக்கியத் துறை
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு வங்கித்துறை சேவைகள் மிக வருவாய் பங்கீட்டை அளிக்கும் நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு உற்பத்தி சுமார் 22.3 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.
இதைதொடர்ந்து நிதி சேவையில் 15.4 சதவீதம், பொதுச் சேவை 14.5 சதவீதம், ரீடைல் சேவையில் 9.2 சதவீதம், லைப்சையின்ஸ் 7.4 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.
வாடிக்கையாளர்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 5 மில்லியன் மதிப்பிலான ஆர்டரில் 24 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து 10 மில்லியன் டாலரில் 11, 20 மில்லியன் டாலரில் 2, 40 மில்லியன் டாலரில் 3, 50 மில்லியன் டாலரில் 5, 100 மில்லியன் டாலரில் 1 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
சேவை விரிவாக்கம்
இக்காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் ஐபிஎம் நிவனத்துடனான சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெற முடியும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஜூன் 30இல் இந்நிறுவனத்தில் 1,17,781 ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், செப்டம்பர் முடிவில் இதன் எண்ணிக்கை 1,19,040 ஆக உயர்ந்துள்ளது.
ஊழிர்கள் வெளியேற்ப்பு
ஹெச்சிஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 16.2 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications