இந்தியன் ரயில்வே நிர்வாகம் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்காகப் பழுதடைந்து உள்ள ரயில் பெட்டிகளை வீடுகளாக மாற்றி அளிக்கும் திட்டத்தினைக் குளிர் காலத்திற்குள் நடைமுறை படுத்த திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களை ஊக்குவிக்கும் திட்டம்
நகர்ப்புற பகுதிகளில் வறுமை ஒழிப்புக்கான தெலுங்கானா மிஷன் பழுதடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ள, ரயில் சேவையில் பயன்படுத்த முடியாத பெட்டிகளை வீடு இல்லாதவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இருப்பதைத் திறன்படப் பயன்படுத்துதல்
பழைய ரயில் பெட்டிகளை ரயில் வீடுகளாக அளிக்கும் முன்பு முறையான தண்ணீர் வசதி, கழிவு நீர் செல்ல வசதிகளைச் செய்து முடிக்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மறுசுழற்சி & மறுபயன்பாடு
பழைய ரயில்வே பெட்டிகளைக் கிடப்பில் போடாமல் மாநில அரசு உதவியுடன் வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தர வீடாகவும் அளிக்க முடியும். நகரங்களில் ஏழை மக்களுக்குத் தேவையான குடியுறுப்பு வசதிகளை ஏற்படுத்தி அளிக்கும் வரை இதுபோன்ற திட்டங்களைச் செய்வது சிறந்த முடிவாகவும் இருக்கும்.
எங்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது?
நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஹைதராபாத், அதலாபாத், கமரேடி, கரிமநகர், மனெச்சிரியல், மெட்சல், பீன்ஸ்சா, நிர்மல், ஆர்மூர், நிசாமாபாத், வெமாலவாடா, சாட்நகர், ஹுஸ்நகர், கொடட், யெல்லாண்டு மற்றும் பாங்கிர் நகரங்களில் 21 வீடுகள் முதற்கட்டமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் வீடு விற்பனைக்கு