வராக் கடன் சொத்துகளை வகைப்படுத்துவதில் விதிமுறை மீறியதற்காகவும், ஏடிஎம் பாதுகாப்பு குறைபாடுகளுக்காகவும் யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஐடிஎப்சி வங்கியின் மீது கடன் வழங்குவதில் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் யெஸ் வங்கியை உட்பட 3 வங்கிகள் 2015-16ஆம் ஆண்டில் தங்களது சொத்துக்களை வகைப்படுத்துவதில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.
2016-17ஆம் ஆண்டு யெஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தனது வராக்கடன் மதிப்பாக 748.9 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆய்வில் அது 4,176 கோடி ரூபாய் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.
யெஸ் வங்கி வெளியிட்ட தொகைக்கும் ஆர்பிஐ கூறிய தொகைக்கும் 558 சதவீதம் வித்தியாசும்.
மேலும் யெஸ் வங்கியின் ஏடிஎம் சேவைகளை ஹிட்டாச்சி பேமெண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகிக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் 32 வாடிக்கையாளர்களின் பற்று அட்டை விபரம் 25 மே முதல் ஜூலை 10,2016 வரையிலான காலத்தில் திருடப்பட்டுள்ளது. இதை யெஸ் வங்கி செப்டம்பர் மாதத்திலேயே கண்டுபிடித்துள்ளது.