மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களாகப் பொதுத் துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகின்றது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ரிஸ்க் இருந்தாலும் பொதுத் துறை வங்கிகளின் பங்குகளைத் தற்போது வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இங்கு வங்கித் துறையில் அதிக முதலீடுகளைச் செய்து வரும் 5 மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.
ஐசிஐசிஐ புருடென்சியல் பேங்கிங் மற்றும் ஃபினான்சியல் சர்வீஸ் ஃபண்டு
ஐசிஐசிஐ புருடென்சியல் பேங்கிங் மற்றும் ஃபினான்சியல் சர்வீஸ் ஃபண்டு 9 வருட பழமையான ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். இதனைடம் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபண்டுகள் உள்ளன. இத்திட்டத்தில் ஒரு வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 28 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 23 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும் லாபத்தினை அளித்துள்ளது.
ஆதித்யா பிர்லா சன் லைப் பேங்கிங் மற்றும் பினான்சியல் சர்வீசஸ் ஃபண்டு
டிசம்பர் 2013-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த ஃபண்டு திட்டம் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டதாகும். சென்ற ஒரு ஆண்டு வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 22 சதவீதம் வரையிலும், மூன்று ஆண்டு வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்டு
இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் பெரிய ஃபண்டு திட்டமாக இது உள்ளது. 2003-ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 27 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 18 சதவீதமும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 19 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
யூடிஐ பேங்கிங் செக்டார் ஃபண்டு
13 வருட பழமை வாய்ந்த இந்தத் திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 24 சதவீதம் வரையிலும், மூன்று வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 17 சதவீதம் வரையிலும், 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 16 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
சுந்தரம் ஃபினாஷியல் சர்வீசஸ் ஆப்பர்ச்யூனிட்டிஸ் சண்டு
2015-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் மிகவும் உறுதியான லாபத்தினை அளித்து வந்துள்ளது. இத்திட்டத்தில் 1 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 19 சதவீதம் வரையிலும் 3 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு மற்றும் 5 வருடம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 15 சதவீதம் வரையிலும் லாபம் அளித்துள்ளது.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications