இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி 15 காலாண்டுகளாகத் தொடர்ந்து லாபம் அடைந்து வரும் நிலையில், செப்டம்பர் காலாண்டிலும் கணிப்புகளைத் தாண்டி லாபத்தைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மீதான முதலீடு 1.41 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 8,190 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
லாபம்
மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 2,484 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும். மேலும் சந்தை கணிப்புகள் மாகுதி சுசூகி 2,230 கோடி ரூபாய் லாபமாகப் பெறும் எனக் கூறப்பட்ட நிலையில் அனைத்தையும் தாண்டி அதிக லாபத்தைப் பெற்றுள்ள மாருதி சுசூகி.
வருவாய்
இக்காலகட்டத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் அளவீடுகள் 22 சதவீதம் வரையில் உயர்ந்து 21,768 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால் கணிக்கப்பட்ட அளவான 22,000 கோடியை அடைய முடிவில்லை.
அதிகப்படியான உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 2 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 2017ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையின் ஆட்டோ குறியீடு 25.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் சுமார் 53.8 சதவீதம் வரையில் இந்த வருடம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றுமதி
இந்தியாவில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது கார்களைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் சுமார் 57,300 கார்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசூகி ஏற்றுமதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 54,008 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.
முழு விபரம்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications