மத்திய அரசு மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காகச் சில புதிய சேவைகளையும் டெலிகாம் நிறுவனங்களை அறிமுகம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளது. இப்படிப் பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
என்ஆர்ஐ
என்ஆர்ஐ-கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் பயன்படுத்த கூடிய சரிபார்ப்பு முறையினை மத்திய அரசு அறிமுகம் செய்ய் உள்ளது.
ஒரு முறை கடவுச்சொல்
மத்திய அரசு மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க இணையதளம் மூலமாக ஒரு முறை கடவுச்சொல்லினை பயன்படுத்திச் சரிபார்க்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் செயலி மூலமாக மற்றும் குரல் அழைப்புகள் மூலமாகச் சரிபார்க்கும் சேவையினை அறிமுகம் செய்துள்ளதாக டெலிகாம் துறை செயலாளர் அருணா சவுந்தராஜன் தெரிவித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள்
ஆதார் கார்டில் பதிவு செய்யாத மொபைல் எண்ணை ஒரு முறை கடவுச் சொல் மூலமாகச் சரிபார்த்து இணைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் எண் வைத்துள்ளவர்கள் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை வைத்து ஆதார் எண்ணுடன் கூடுதல் மொபைல் எண்ணை இணைக்கலாம் மற்றும் சரிபார்க்கலாம்.
வீட்டில் இருந்தபடி சரிபார்த்தல்
மூத்த குடிமக்கள், ஊனமுற்றவர்கள், நோயாளிகள் டெலிகாம் சேவை வழங்குனரிடம் கோரிக்கை வைத்தால் நேரடியாக அவர்களில் வீடுகளுக்கு வந்து ஆதார் சரிபார்ப்பினை செய்துகொள்வார்கள்.
ஏன் இந்த முடிவு?
சில டெலிகாம் நிறுவனங்கள் சர்வர் இணைப்பு வேகம் குறைவாக இருக்கின்றது என்று கூறி ஒன்றுக்கு மேற்பட்ட முறை பின்னர் வரவும் என்று கூறுகின்றனர் என்று எழுந்த புகாரினை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு
ஏற்கனவே என்ஆர்ஐ-களுக்குப் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications