சென்னை:தபால் நிலையம் கீழ் இயங்கி வரும் சிறு சேமிப்புக் கணக்குகளுக்குப் புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு எனப்படும் பிபிஎப் திட்டங்களில் முதலீடு செய்து வந்து என்ஆர்ஐ ஆக உங்களது தற்போதைய நிலை இருந்தால் முதிர்வு காலத்திற்கு முன்பே உங்கள் கணக்கு மூடப்படும்.
இதற்கான அரசாணையினை மத்திய அரசு அக்டோபர் மாத துவக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிபிஎப்
பிபிஎப் திட்டத்திற்கான திருத்த சட்டம் 1968-ன் கீழ் இந்தியாவில் உள்ள தனிநபர் ஒருவர் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வந்து முதிர்வு காலத்திற்கு முன்பே என்ஆர்ஐ ஆக மாறினால் எப்போது என்ஆர்ஐ நிலைக்கு வந்தீர்களோ அப்போது முதல் முதலீடு செய்ய முடியாது.
பிபிஎப் வட்டி விகிதம்
கணக்கு முட்டப்பட்டது வரையிலான வட்டி விகிதத்தினைப் பெறலாம், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது 7.8 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.
தேசிய சேமிப்புப் பத்திரம்
தேசிய சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் பத்திரமாக உங்கள் முதலீடுகள் அனைத்தும் நீங்கள் என்ஆர்ஐ நிலைக்கு மாறிய உடன் அவை பணமாக மாறிவிடும். வட்டி விகிதம் எப்போது கணக்கு மூடப்பட்டதோ அப்போது வரை கிடைக்கும்.
முதலீடு திட்டங்கள்
தேசிய சேமிப்புப் பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி, மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் தபால் நிலயங்களில் உள்ள பிற சேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்து வந்திருந்தால் அவற்றைத் தொடர முடியாது.
தெளிவாக விவரங்கள் இல்லை
மத்திய அரசின் இந்தத் திருத்த சட்டம் குறித்து முதலீட்டார்களுக்கான வல்லுநர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குத் தபால் நிலயங்களில் உள்ள சேமிப்புத் திட்டங்கள் குறித்த என்ஆர்ஐ களின் முதலீடு பற்றித் தெளிவான தகவல் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.
சிறு சேமிப்புத் திட்டம்
சென்ற மாதம் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான இந்தக் காலாண்டிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை. பிபிஎப் திட்டத்திற்கு 7.8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கின்றது.
More From GoodReturns

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications