இந்தியன் ரயில்வேயில் 5 வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..!

இந்திய ரயில்வே நிர்வாகம் அடுத்த 5 வருடத்தில் 15,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் கூடுதல் 10 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய மைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது பியூஷ் கோயல் அவர்கள் ரயிவே துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார், மேலும் தேசிய போக்குவரத்துத் துறையினைப் புதிய பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதி அளித்திருந்தார்.

 முதலீடு

முதலீடு

அடுத்து வர உள்ள 5 ஆண்டுகளில் ரயில்வே 15,000 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.அ தன் மூலம் 10 லட்சம் நபர்களுக்கும் அதிகமாக ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

ரயில்வேயின் நோக்கம்

ரயில்வேயின் நோக்கம்

மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான பயணங்களை அளிப்பது ரயில்வேயின் முக்கிய நோக்கம் என்று ஆங்கில நாளிதழின் விழா ஒன்றில் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மின்சார ரயில் பாதை அமைக்கும் பணிகள்

மின்சார ரயில் பாதை அமைக்கும் பணிகள்

இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பை உயர்த்துவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைவார்கள். ரயில் தடங்களை அடுத்த 10 வருடத்திற்குள் முழுமையாக மின்சாரப் பாதையாக மாற்ற இருந்த திட்டத்தினை 4 வருடத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் நட்டம் அளித்து வந்த ரயில்வே நிர்வாகத்தால் 30 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று அவர் கூறினார்.

10,000 கோடி சேமிக்க முடியும்

10,000 கோடி சேமிக்க முடியும்

ரயில் பாதையினை முழுமையாக மின்சாரப் பாதையாக மாற்றுவதினால் ஒரு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வரை ரயில்வே நிர்வாகத்திற்கு எரிபொருள் கட்டணம் குறையும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஒரு மாதத்திற்கு முன்பு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் 12 மாதத்தில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

சுரேஷ் பிரபு

சுரேஷ் பிரபு

2015-ம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ரயில்வே நிர்வாகத்திற்கு அடுத்த 5 ஆண்டில் 8.5 டிரில்லியன் ரூபாய் முதலீடு வரை தேவைப்படுகின்றது என்று தெரிவித்தது மட்டும் இல்லாமல் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

எல்ஐசி

எல்ஐசி

மேலும் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்து 1.5 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள டெபெட் ஃபண்டுகளை ரயில்வே திட்டங்களுக்காகப் பெற் இருப்பதாகக் கூரி இருந்தார். பியூஷ் கோயல் அவர்களின் திட்டத்திற்கும் சுரேஷ் பிரபு அவர்களின் திட்டமும் ஒன்றுதானா என்பது மட்டும் தெரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+