மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் 21,000 ரூபாயாகக் கண்டிப்பாக உயரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலாம் மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியத்தினை உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஜேக்பாட்டாக அமைந்துள்ளது. இப்போது தேசிய ஒழுங்குமுறை குழு மற்றும் அரசின் செலவுகளை நிர்வகிக்கும் துறையும் இது குறித்து விவாதித்து வருகின்றன.
குறைந்தபட்ச சம்பளம்
தேசிய ஒழுங்குமுறை குழுவிற்கு ஜன்சட்டா அறிக்கையின் கீழ் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஃபிட்மெண்ட் காரணிகள் குறித்த இசைவை மத்திய அரசு காட்டியுள்ளது. இதனால் தற்போது குறைந்தபட்ச சம்பலமாக உள்ள 18,000 ரூபாய் 21,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
7வது சம்பள கமிஷன்
தேசிய ஒழுங்குமுறை குழு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் கீழ் வரும் பலதரப்பட்ட பரிவர்த்தனை சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைக்கபப்ட்டுள்ளது. இந்தக் குழுவில் செலயாலர்கள் உட்பட 22 நபர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் அலுவல் மற்றும் ஊழியர்கள் மற்றும் இரண்டு தரப்பு குறித்தும் ஆராய்ந்து மத்திய அரசு தெரிவிப்பார்கள்.
கொடுப்பனுவுகள்
முன்னதாக ஜூன் மாதம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 திருத்தங்களுடன் ஜூலை 1 தேதி முதல் விட்டு வாடைகைப்படி, அகவிலைப்படி போன்றவற்றை அளித்தது.
தமிழக அரசு ஊழியர்கள்
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள 2.57 மடங்கு அடிப்படை ஊதிய உயர்வு அக்டோபர் மாதம் முதல் அளிக்க இருப்பதாக எடப்பாடி தலைமையினலான அரசு தீபாவளிக்கும் முன்பு அறிவித்து . ஆனால் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ளதைப் போன்று 2016 ஜனவரி மாதம் முதலான நிலுவை தொகையினை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.