இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் 2-ம் காலாண்டு அறிக்கை இன்று வெளியானது. அதில் 77 சதவீதம் நிகர லாபம் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று காலாண்டுகளாகத் தொடர் சரிவை ஏர்டெல் சந்தித்து வருகின்றது. 2017-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கை விவரங்கள்:
இரண்டாம் காலாண்டு அறிக்கை
செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் 343 கோடி வரை லாபத்தினை இழந்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இதுவே 2016-2017-ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 1,561 கோடி ரூபாய் வருவாயினை ஏர்டெல் பெற்று இருந்தது.
எதிர்பார்ப்பை மிஞ்சிய வருவாய்
எதிர்பார்த்ததை 303 கோடி ரூபாயினை விட அதிகமாகவே ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் உள்ளதாகத் தாம்சன் ரீயூட்டர்ஸ் தரவு கூறுகின்றது.
வெளிநாட்டு வருவாய்
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் மொத்தம் 17 நாடுகளில் வணிகம் செய்து வரும் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 11.7 சதவீதம் சரிந்து 21,777 கோடியாக உள்ளது.
போட்டி
சென்ற ஆண்டுச் செப்டம்பர் மாதம் முதல் ஏர்டெல், வோடாபோன், ஐடியா நிறுவனங்கள் புதிதாகத் துவங்கப்பட்ட ஜியோவிடன் விலை போரில் விலை குறைத்ததினால் தான் இந்த வருவாய் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வரும் காலாண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.