செயலி மூலமாக டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவை அளித்து வரும் ஓலா நிறுவனம் ஆட்டோவில பயணிகளுக்கு விரைவில் இலசவச இணையதள அரவை வழங்க முடிவு செய்துள்ளது.
ஓலா டாக்ஸி சேவை பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோவை தவிரப் பிர வாகனங்களைப் புக் செய்யும் போது இலவச வைஃபை சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஓலா நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 3,00,000 முதல் 4,00,000 லட்சம் வரை ஆட்டோ ரைடுகள் செய்யப்படுகின்றது. மொத்தமாக 1,20,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தியாவின் முக்கிய 74 நகரங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஓலா ஆட்டோக்களில் இலவச வைஃபை சேவை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை மேலும் கூட்ட முடியும் என்றும் முடிவு எடுத்துள்ளதாக நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான சித்தார்த் அகர்வால் தெரிவித்தார்.