இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் இன்று வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் 4 மடங்கு லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 552 கோடி ரூபாய் லாபத்தினை முதன் முறையாகப் பெற்றுள்ளது எனப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 27 சதவீதம் வரை உயர்ந்து 5,291 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாம் காலாண்டில் குறைந்த அளவில் தான் விடுமுறை என்றாலும் அதிகளவில் விமானப் பயணப் போக்குவரத்தைச் செய்ய மாட்டார்கள் என்றாலும் அதிக லாபத்தினை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது ஆச்சர்யத்தினை அளித்துள்ளது.
விமானப் பயணத்தின் ஒவ்வொரு கிலோ மீட்டாருக்கும் 13 சதவீதம் வரை உயர்ந்து 3.52 ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது