திருநங்கைகளுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அடுத்தக் கட்டமாக ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இனி ஆண் (M), பெண் (F), மற்றும் திருநங்கைகளுள் (T) என்ற குறியீடுகள் இருக்கும்.
இதற்காக அனைத்துப் பகுதி ரயில்வே நிர்வாகங்களுக்கு டரில் டிக்கெட் படிவங்களில் திருநங்கைகள் (T) என்ற குறியீடு இருக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம் திருநங்கைகளுக்கான பிரச்சனைகள் குறித்த சட்டத்தின் கீழ் இந்த உரிமையினை அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அளித்த கோரிக்கையினைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே விரைவில் ஆண், பெண்கள் போன்று திருநங்கைகளுக்கும் F என்ற குறியீடுகள் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இருக்க வேண்டும் என்று அக்டோபர் 17-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.