கனடா: அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் வித்துள்ள நிலையில் கனடா மட்டும் ஆச்சரியமான அனைவரையும் வாயைப் பிளக்க செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்குக் கனடா குடிபெயர அனுமதி அளிக்க உள்ளதாம். இதற்கான அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சரே வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் மிகப் பெரிய குடியேற்ற அனுமதி
2018-ம் ஆண்டு மட்டும் 3,10,000 நவர்களுக்குக் குடியேற அனுமதி வழங்கப்பட இருக்கின்றது. அப்படியே தொடர்ந்த 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கு, 2020-ம் ஆண்டு 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இது கனடா வரலாற்றில் என்று இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும்
விமர்சகர்கள் சொன்ன அடேங்கப்பா கருத்து
கனடாவின் பொருளாதாரம் மற்றும் குடும்ப வகைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 0.8 சதவீத மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வந்தது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரம் விமர்சகர்கள் கனடாவின் வணிகங்களைச் சமாளிக்க வற்ற ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்கள் குடிபெயர்வு தேவை எனக் கூறப்படுகின்றது.
குறைந்த வரும் பிறப்பு விகிதம்
மக்கள் தொகை கணக்கு எடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இந்து கனடா வந்து பிள்ளைகள் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம்
கனடா குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆப்ரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளைப் பொறுத்தது கூறப்படுகின்றது. அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்தியர்களுக்கு அடித்த ஜேக்பாட்
நைஜீரியா, அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் மற்றும் பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா, ஈரான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக நபர்களைக் குடிபெயர அனுமதிக்கப்பட உள்ளனர்.
இங்குக் கிளிக் செய்யவும்." data-gal-src="http:///img/600x100/2017/11/02-1509618360-canada4.jpg">