பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி தாக்கத்தினை இந்தியாவில் இருந்து முறியடிக்க மத்திய நடவடிக்கை எடுக்க உள்ளதாக வியாழக்கிழமை செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்கச் சந்தையில் பிட்காயினின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் இதனை இந்தியாவில் தடை செய்வதற்கான நடைவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
பிட்காயினி இன்றைய மதிப்பு
பிட்காயினின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத உச்சமாக 6,938 டாலரினை எட்டியுள்ளது. பிட்காயின் தான் உலகளவில் மிகவும் பழமையான கிரிப்ட்டோ கரன்சி ஆகும்.
கிரிப்ட்டொ கரன்ஸிகள்
உலகளவில் பல வகையான கிரிப்ட்டொ கரன்சிகள் இருந்தாலும் பிர்காயின் தான் பிரபலமானவை. அவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்காததால் இதில் முதலீடு செய்வது மிகப் பெரிய ரிஸ்க் ஆகும்.
உலகம் முழுவதும் கிரிப்ட்டோ கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்து வரும் நிலையில் நல்ல லாபத்தினையும் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றது.
இந்திய மதிப்பு
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 1.79 லட்சமாக இருந்த பிட்காயினின் மதிப்புத் தற்போது 4.90 லட்சத்தினை எட்டியுள்ளது.
முடியாத காரியம்
கிரிப்ட்டோ கரன்சி சந்தை வல்லுனர்கள் இதனைத் தடை செய்வது என்பதும், புரோக்கர்களைப் பிடிப்பதும் சாத்தியம் இல்லாதது எனக் கூறுகின்ற நிலையில் இந்திய அரசு இதன் மீது கண் வைத்துள்ளது.
மத்திய அரசு
கிரிப்ட்டோ சரன்சிகள் தான் உலகின் அடுத்த ஸ்விஸ் வங்கியாகக் கருப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வைக்க உதவும் என்று கூறப்படுவதே மத்திய அரசு இதன் மீது குறிவைக்கக் காரணம் ஆகும்.