பழைய 500, 1000 ரூபாய் தடையால் டிஜிட்டல் பணபரிமாற்றங்கள் 80% உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-18ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் பணபரிமாற்றங்களின் அளவு சுமார் 80 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 1,800 கோடி ரூபாய் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் மீதான தடை தான் இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணம்.

1,000 கோடி ரூபாய்

1,000 கோடி ரூபாய்

அக்டோபர் வரையிலான காலத்தில் 1,000 கோடி ரூபாய் அளவிலான டிஜிட்டல் பண பரிமாற்றம் நடந்துள்ளது, இது 2016-17ஆம் நிதியாண்டின் மொத்த அளவீடாகும். அதுவும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 136-138 கோடி ரூபாய் அளவிலான நிதி பறிமாற்றங்கள் நடந்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம்

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின் 2017ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் பணபரிமாற்றங்களின் அளவு 156 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

 பரிமாற்ற முறைகள்

பரிமாற்ற முறைகள்

மோடி அறிவித்த பணமதிப்பிழப்புக்கு பின் இந்தியாவில் யூபிஐ, பிம், ஐஎம்பிஎஸ், மொபைல் வாலெட் மற்றும் டெபிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

 வளர்ச்சி

வளர்ச்சி

நவம்பர் 2016ஐ ஒப்பிடுகையில் பணபரிமாற்றங்களின் எண்ணிக்கையில் 221 சதவீதமும், மதிப்பிட்டு அளவில் 118 சதவீதமும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Demonetisation 80% rise in digital payments

After Demonetisation 80% rise in digital payments
Story first published: Saturday, November 4, 2017, 18:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X