இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு அதிகமான வாங்கும் தங்க நகைக்குக் காட்டாயப் பான் கார்டு விதிமுறையை விலக்கியது.
இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனைக்குப் பான் கார்டு அல்லது பான் எண் தேவையில்லை என வருவாய் துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் மத்திய நேரடி வருவாய் அமைப்பு, வருமான வரிச் சட்டம் 1961இல் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
புதிதாகக் கொண்டு வரப்பட்ட 269எஸ்டி சட்டத்தின் படி, ஒரு நாளில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஒற்றை விற்பனையாகவோ அல்லது தொடர்புடைய விற்பனையாகவோ இருந்தால் இதற்கு வருமான வரி விலக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ரொக்க விற்பனை தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகை விற்பனைக்குப் பான் மற்றும் பார்ம் 60 ஆகியவைற்ற சமர்ப்பிக்கத் தேவையில்லை.