இந்தியாவை மட்டும் அல்ல உலகையே வயப்பில் ஆழ்த்தியது பழைய 500 மற்றும் 1000 ரூபாயின் தடை. இவ்வறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த ஒரு மாத காலத்திற்கு இந்திய மக்களை வாட்டிவதைத்தது. அதுமட்டும் அல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்களில் பணப்புழக்கம் இல்லாமல் தடுமாறி நின்றதை நாம் மறந்திருக்க முடியாது.
பணமதிப்பிழப்பின் அறிவிக்கப்பட்டு 1 வருடம் முழுமையாக முடிந்தும் இதன் பாதிப்பு இன்னும் இந்திய பொருளாதாரத்தை விட்டு நீங்கவில்லை.
18 லட்சம் பேர்
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில், சுமார் 18 லட்சம் பேர், வங்கி கணக்கில் அளவிற்கு அதிகமாக/வழக்கத்திற்கும் அதிகமான பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது வருமான வரி அமைப்பின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இவர் வைப்பு செய்த பணத்திற்கான ஆதாரத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
99 சதவீதம் பணம்
பிரதமர் மோடியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் மட்டுமே வங்கி கணக்கில் வந்துள்ளது, இது தோல்வி என நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நடத்த ஒரு வருட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கூறினார்.
முதலீட்டுத் திட்டங்கள்
மேலும் இக்காலகட்டத்தில் மியூச்சுவல் பண்டு, இன்சூரன்ஸ், மூலதன சந்தை ஆகியவற்றின் வாயிலாகவும் பணம் வங்கிகளுக்குள் நுழைந்துள்ளது. ஆகவே கடந்த ஒரு வருடத்தில் குறிப்பாகப் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் இத்திட்டங்களில் முதலீடு செய்தோரின் விபரத்தை முழுமையாகச் சேகரித்துள்ளது வருமான வரித்துறை.
வரி ஏய்ப்பு
ஒரு நாட்டின் மின்சாரப் பரிமாற்றம் அல்லாமல் பணம் (நாணயம், காகித பணம்) வயிலான பரிமாற்றங்கள் அதிகமாக இருந்தால் இது பல வரி ஏய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் பணத்தினால் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தின் அளவீடுகள் நாட்டின் ஜிடிபி அளவில் 12.2 சதவீதமாகும். இதனைக் குறைக்கப் பணமதிப்பிழப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
முக்கிய நடவடிக்கைகள்
பணமதிப்பிழப்பின் வாயிலாக இந்சியாவில் பினாமி சொத்து, மறைமுக வரி ஆகியவற்றில் அடைப்படை மாற்றங்கள் கொண்டு வர முடிந்தது என ஜேட்லி இன்றைய கூட்டத்தில் கூறினார்.
வெற்றி
மொத்தத்தில் பணமதிப்பிழப்பால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்விதமான பாதிப்புமில்லை, இது வெற்றிப்பெற்ற திட்டமாகவே மத்திய அரசால் பார்க்கப்படுகிறது.
ஆனா இன்னும் ரிசர்வ் வங்கி, வங்கி அமைப்பிற்குள் வந்த பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளைக் கணக்கிட்டு முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications