கழுத்தை நெரிக்கும் அளவிற்கு 'பிரச்சனை'.. இழுத்து மூடிவிடும் யோசனையில் 'ஏர்செல்..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் ஏர்செல் சேரும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது ஏர்செல். இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே போட்டி வலிமை அடைந்து வரும் நிலையில் ஏர்செல் நிறுவனத்திடம் தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.

இதனால் நிறுவனத்தை முழுமையாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் நிற்கிறது ஏர்செல்.

முக்கியப் பிரச்சனை

முக்கியப் பிரச்சனை

இந்திய டெலிகாம் சந்தையின் வர்த்தகம் தற்போது அதிகளவில் 4ஜி அலைக்கற்றைகளை மட்டுமே நம்பி இயங்க துவங்கியுள்ளது. காரணம் இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது 4ஜி சேவையைப் பயன்படுத்தும் போன்களையே வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.

 

நீதிமன்ற உத்தரவு..

நீதிமன்ற உத்தரவு..

ஏர்செல் நிறுவனத்திடம் இருக்கும் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகளை விற்றுவிட்டு 4ஜி அலைக்கற்றை வாங்கத் திட்டமிட்டால், 2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் நிறுவனம் வைத்துள்ள அலைக்கற்றைகளை விற்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

தனியாக 4ஜி அலைக்கற்றை வாங்கலாம் என்றால் கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளது ஏர்செல்.

 

கடன்

கடன்

தற்போதைய நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் அளவு மட்டும் 20,00 கோடி ரூபாய்.

4ஜி அலைக்கற்றைகளை இல்லாத நிறுவனத்தை வாங்க தற்போது எந்த ஒரு போட்டி நிறுவனமும் விரும்பாது.

 

விற்பனை

விற்பனை

இத்தகைய சூழ்நிலையில் ஏர்செல் நிறுவனத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் ஏர்செல் நிறுவனம் தனது சொத்துக்களைத் தனித்தனியாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் படி அலைக்கற்றை மற்றும் 8.9 கோடி வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்திற்கும், தன்னிடம் இருக்கும் 40,000 டெலிகாம் டவர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

 

 திவால்

திவால்

ஏர்செல் நிறுவனத்தைத் திவாலானது என அறிவித்து மூடப்பட்டால், இந்நிறுவனத்தின் மலேசிய தாய் நிறுவனமான மேக்சிஸ் உடன் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். மேலும் அடுத்தப் பல வருடங்களுக்குத் தாய் நிறுவனத்துடன் வழக்கு தொடரும்.

இத்தகைய பிரச்சனையை ஏர்செல் நிர்வாகம் தற்போது சிந்திக்காது.

 

திருப்பம்

திருப்பம்

இந்நிலையில் மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவரான டி அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் ரபேல் மார்ஷல் ஆகியோர் நீதிமன்றத்தின் முன் ஆஜர் ஆனால் ஏர்செல் நிறுவனத்தின் மீதான நீதிமன்ற தடைகள் நீக்கப்படலாம்.

மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் உடனான கூட்டணி திட்டம் உடைந்ததிற்கும் இதுவே முக்கியக் காரணமாகும்.

 

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

ஏர்செல் நிறுவனம் தனது கடன் அளவுகளைக் குறைப்பதற்காகத் தனக்கு அதிக வருவாய் அளிக்கும் பகுதிகளுக்கு மட்டும் சேவை அளிக்கலாம் என முடிவு செய்து செய்து தற்போது தமிழ்நாசு, ஜம்மு மற்றும் காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகளில் மட்டும் சேவை அளிக்கும் வகையில் மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்ய உள்ளது.

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ்

ஏற்கனவே அதிக நஷ்டத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து சேவையை அளித்துக் கூடுதல் நஷ்டத்தைப் பெறுவதை விட, டாடா டெலிசர்வீசஸ் போல நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விற்றுவிடலாம்.

ஏர்செல்

ஏர்செல்

இந்திய டெலிகாம் சந்தையில் போட்டி அளவீடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் கடைசிக் கட்ட முடிவுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+